கரூர் வரலாறு 4ம் பாகம்
கரூர் வரலாறு
3ம் பாகத்தில், பெத்தாச்சி செட்டியார் கட்டிய வளைவுப்பற்றி பார்த்தோம். அதே பெத்தாச்சி
செட்டியார், கரூருக்கு ஒரு பாலம் கட்டிக்கொடுத்தார். அது 90 வருடங்களாகியும் இப்போதும்
கம்பீரமாக, கரூருக்கும், திருமாநிலையூருக்கும் இடையில் அமைந்திருக்கும் அந்த பாலத்தை
பற்றித்தான் இந்த 4ம் பாகத்தில் பார்க்க இருக்கிறோம்.
கரூரையும், திருமாநிலையூரையும்
இணைக்கும் விதமாக இடையில் ஒரு பாலம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து அதற்கு பெரும் பொருளுதவி
செய்திருக்கிறார் பெத்தாச்சி செட்டியார் அவர்கள். ஆனார் துரதிஷ்டவசமாக கடந்த 1919ல்
அந்த தொடங்கப்பட்ட அந்த பாலம் கட்டி முடிக்கும் முன்பே மிக இளம் வயதிலேயே பெத்தாச்சி
செட்டியார் அவர்கள் இறந்துவிட்டார். அந்தப் பாலமானது அவருடைய வழக்கறிஞர் ஸர். தேசிகாசாரியார்
அவர்கள் அப்போதைய ஜில்லா போர்டின் தலைவராக இருந்தபோது, கடந்த 1924ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.
அந்தப் பாலம் வழக்கறிஞர் தேசிகாசாரியார் பெயரில்தான் அந்தப் பாலம் இன்று வரை அழைக்கப்படுகிறது.
(சான்று படம் கீழே உள்ளது) அந்தப் பாலம் கடந்த 20.06.1924ம் ஆண்டு அப்போதைய சென்னை
கவர்னர் ஹாக்ஹர்ஸ்டினர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சீமாட்டி வெலிங்டன்
வருகை நினைவாக பெத்தாச்சி செட்டியார் அவர்கள் கட்டிய ஞாபகார்த்த வளைவானது, கடந்த
1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதி பெத்தாச்சி பெயரில் மாற்றப்பட்டு, அன்று முதல்
இன்று வரை பெத்தாச்சி செட்டியார் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
கரூருக்கும்,
பசுபதிபாளையத்திற்கும் இடையில் இருக்கும் பாலமானது கடந்த 1964ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு,அப்போதைய
விவசாய அமைச்சரான திரு. கக்கன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கரூர் – திண்டுக்கல்
இடையே இரயில் சேவை கடந்த 06.08.1988ம் ஆண்டு தொடங்கப்பட்டு அது, அப்போதைய பிரதமர் திரு.
ராஜீவ் காந்தி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment