கரூர் வரலாறு பாகம் 3, உங்கள் பார்வைக்கு,
திருச்சிராப்பள்ளி – ஈரோடு இரயில் தொடர்பு 1868ல் அப்போதைய கிரேட் செளத் இண்டியன் ரெயில்வே கம்பெனியாரால் ஏற்படுத்தப்பட்டது. 1860ம் ஆண்டுகளில் சென்னையிலிருந்து, திருச்சிராப்பள்ளிக்கு, விழுப்புரம், விருத்தாசலம் மார்க்கமாக குறுக்கு பாதை அமைப்பதற்கு முன் , விழுப்புரம் – கடலு◌ார் – தஞ்சை வழியாக முதன்மை வழித் தடத்தை அந்த நிறுவனம் அமைத்தது. அதே சமயம் சென்னையிலிருந்து ஈரோடு வழியாக கோழிகோட்டுக்கு மெட்ராஸ் ரெயில்வே என்கிற நிறுவனம் இருப்புப் பாதை அமைத்திருந்தது. இந்த இரு வழித்தடங்களையும் இணைக்கும் விதமாகத்தான் திருச்சிராப்பள்ளி – ஈரோடு இரயில் பாதை அமைக்கப்பட்டது. விழுப்புரத்திலிருந்து விருத்தாசலம் மார்க்கமாக திருச்சிராப்பள்ளிக்கு இரயில் இணைப்பு ஏற்படுத்துவதற்கு முன்பே, திருச்சிராப்பள்ளி – ஈரோடு இரயில் பாதை அமைக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடதக்கது.
இந்த
வழித்தடங்களின் மையத்தில் அமைந்திருந்த கரூர் நகருக்கு அருகில் ஓடிய அமராவதியில் அப்போது
அமைக்கப்பட்ட இரயில்வே பாலம் நு◌ாற்றொன்பது ஆண்டுகளுக்கு பின் வந்த பெரும் வெள்ளத்தில்,
அதாவது, கடந்த 1977ம் ஆண்டு நவம்பர் மாதம் அடித்து செல்லப்பட்டது. பிறகு புதுப்பிக்கப்பட்டது.
கரூருக்கு கடந்த 1868ம் ஆண்டுகளிலேயே இரயில் போக்குவரத்து வந்தது. கரூர் நகரம் வளர்ச்சிக்கு
மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
முதல்
உலகப்போருக்கு பிறகு இங்கு குடிவந்த நகரத்தார் குலச் செம்மல், பெத்தாச்சி செட்டியார்
கரூரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறார். செவி வழி செய்திகளின் படி செட்டிநாட்டு
செல்வரான அவருக்கு பிரிட்டிஷ் அரசு வழங்கும் ஸர் பட்டம் பெற மிகுந்த விருப்பமாக இருந்ததாம்.
அதற்கா அவர் தன் குடும்ப வழக்கறிஞரான தேசிகாசாரியிடம் ஆலோசனை கேட்டாராம். அவர் பெத்தாச்சி செட்டியாரை முதலில் ஒரு ஜமீந்தார் பட்டத்தை பெபற்றுக் கொள்ளச் சொல்லி ஆலோசனை சொன்னதால்,
கரூருக்கு அருகில் விலைக்கு வந்த ஆண்டிப்பட்டி ஜமீனை வாங்கியிருக்கிறார். அதை நிர்வாகிக்க
அருகிலிருந்த நகரான கரூரில் ஒரு தோட்ட விடுதி கட்டிக்கொண்டு இங்கேயே குடியிருந்திருக்கிறார்.
கரூரிலுள்ள பசுபதீஸ்வரர் கோவிலுக்கு குடமுழுக்கு செய்து, சிதிலமடைந்திருந்த சுற்றுச்
சுவர்களை புதுப்பித்து, மடவளாகத் தெருக்களை ஏற்படுத்தியுள்ளார். அந்நாள் கவர்னர் வெலிங்டன்
பிரபு மற்றும் அவர் மனைவி சீமாட்டி வெலிங்டன் ஆகிய இருவரையும் கரூருக்கு அழைத்து வந்து
நகராட்சியில் வரவேற்பு கொடுத்து, அதற்காக ஒரு ஞாபகார்த்த வளைவை (ஆர்ச்) நகராட்சி கட்டிடத்திற்கு
அருகில் கட்டியுள்ளார். (படம் உங்கள் பார்வைக்கு கீழே தரப்பட்டுள்ளது)
பெத்தாச்சி செட்டியார் கட்டிய நினைவு ஆர்ச் |
கரூர் பெத்தாச்சி செட்டியார் கட்டிய லைட்ஹவுஸ் பாலம், இன்றுடன்(20/06/2021) 97வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இந்நாளில் ஐயா பெத்தாச்சி செட்டியாரின் புகழை போற்றி வணங்குவோம்.🙏🙏🙏
ReplyDelete